ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரூபி பிலிம்ஸ் சார்பில் ஹஷீர் தயாரிக்கும் படம் வண்டி. புதுமுக இயக்குனர் ரஜீஷ் பாலா இயக்குகிறார். விதார்த், சாந்தினி, ஸ்ரீராம் கார்த்திக், கிஷோர்குமார், ஜான் விஜய், அருள்தாஸ் உள்பட பலர் நடிக்கிறார்கள். ராகேஷ் நாராயணன் ஒளிப்பதிவு செய்கிறார். சூரஜ் எஸ்.குரூப் இசை அமைக்கிறார். படம் பற்றி இயக்குனர் ரஜீஷ் பாலா கூறியதாவது:
காணமல் போன தன்னோட சைக்கிளைத் தேடும் குடும்பஸ்தன் கடைசியில் வேறொருவரின் சைக்கிளைத் திருடும் நிலைமைக்கு தள்ளப்பட்டு, அவன் வாழ்க்கையில் தொலைந்து போன சைக்கிளால் என்ன ஆனான், என்பதை பை சைக்கிள் தீவ்ஸ் என்ற ஈரானிய படம் காட்டியது.
அதே போல் ஒரு இளைஞன் தன்னோட அப்பாவின் வாழ் நாள் சேமிப்பு எல்லாத்தையும் எடுத்து ஒரு பைக்கை வாங்குகிறான். தான் ஆசைப்பட்ட பைக் வந்ததும் அது நாள் வரை வெறுமெனே பார்த்து வந்த பெண் காதலிக்க தொடங்குகிறாள். வேலை கிடைத்து கை நிறைய சம்பளம் கிடைக்கிறது. வாழ்க்கை சந்தோஷமாக போய்க்கொண்டிருக்கும் போது, அந்த பைக் காணாமல் போகிறது. அந்த பைக்கால் அவன் என்ன ஆனான் என்பதை பொல்லாதவன் படம் காட்டியது.
அதேபோல இந்த படத்தில் நவீன யமஹா பைக் படத்தின் முக்கிய பாத்திரமாக வருகிறது.
அதுவும் மூன்று தளங்களில் நடக்கும் கதையில் அந்த பைக் மூன்று பரிமாணத்தில் தோன்றுகிறது. கதையில் பைக்கே பிரதானமாக வருவதால் படத்தின் தலைப்பே வண்டி என்று வைத்திருக்கிறோம் என்கிறார் இயக்குனர்.