டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கிரேட் எம்பரர் புரொடக்ஷன்ஸ் எனும் புதிய பட நிறுவனம் சார்பில் சி.பிரேம் குமார் தயாரிக்கும் படம் சீமத்தண்ணி. முன்னனி இயக்குனர்களிடம் இணை இயக்குனராக பணியாற்றிய விஜய் மோகன், கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குனராக அறிமுகமாகிறார். விதார்த், விஜய் வசந்த கதாநாயகர்களாக நடிக்க, கதாநாயகிகளாக சாந்தினி மற்றும் சுபிக்ஷா நடிக்கின்றனர். இவர்களுடன் யோகிபாபு, ஹலோ கந்தசாமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மசானி ஒளிப்பதிவு செய்கிறார். சதீஷ் திருமூர்த்தி இசை அமைக்கிறார். படம் பற்றி இயக்குனர் விஜய் மோகன் கூறியதாவது:
ரேஷன் கடையே தாய் வீடாக நினைத்து வாழும் 2 அநாதை நண்பர்களுக்கும், 10க்கும் மேற்ப்பட்ட வீடுகளில் வேலை பார்க்கும் "தங்கமாரி" எனும் கதாபாத்திரத்திற்க்கும் நடக்கும் வாழ்க்கை பதிவுகளை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் யதார்த்தமாகவும், ரசிக்கும் படியும் உருவாகிறது. மலர்விழி எனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் சாந்தினி. விரைவில் படப்பிடிப்புகள் துவங்குகிறது. என்றார்.