தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு மலையாள நடிகர் திலீப் போலீஸ் வாகனத்தில் அழைத்து வரப்படுவதும் பின் சிறைக்கு அழைத்து செல்லப்படுவதையும் பார்க்கும்போது, எப்படி இருந்த மனிதன் இப்படி நிலைக்கு ஆளாகிட்டாரே என்கிற ஆதங்கத்தை ஏற்படுத்தவே செய்யும்.. ஆனால் போலீஸ் வட்டாரத்திலோ திலீப் சில போலீசாரிடம் எதார்த்தமாக பேசிக்கொண்டு, அவ்வப்போது ஒன்லைன் காமெடி பஞ்ச்'களை கூறி சிரிக்க வைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது,..
குறிப்பாக அவரது அரெஸ்ட் பற்றி சிறையில் இருந்த போலீஸாரில் சிலர் வருத்தத்துடன் அவரிடம் விசாரித்தார்களாம். ஆனால் அவரோ தனது படங்களில் பேசுவது போலவே, “நான் ஆண்டவனிடம் எனக்கு பத்துநாள் ரெஸ்ட் கொடு என கேட்டேன்.. அது அவர் காதில் அரெஸ்ட் என விழுந்து விட்டது போல.. அதனால் பத்துநாள் அரெஸ்ட் தந்துவிட்டார்” என சிரித்துக்கொண்டே கூறினாராம்.