ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நேற்று, இன்று, நாளை என்ற தலைப்பில் ஜூலை 8 ம் தேதி இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி லண்டனில் நடந்தது. இதில் தில் சே முதல் ஜெய் ஹோ தான் இசையமைத்த ஏராளமான பாடல்களை ரகுமான் பாடினார்.
நிகழ்ச்சியில் சில தமிழ்ப்பாடல்களையும் ரகுமான் பாடினார். இதை விரும்பாத சில ரசிகர்கள், நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினர். சிலர் தாங்கள் அளித்த நன்கொடையை திருப்பித்தர சொல்லியும் கேட்டனர். இச்சம்பவம் பெரும் சர்ச்சையாக்கப்பட்டது. டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும், தமிழ் பாடல்களை பாடி ரகுமான் ரசிகர்களை அவமதித்து விட்டார். ரகுமான் தன்னை தமிழன் என்றே நிலைநிறுத்திக் கொள்கிறார் என்றும் குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில் நியூயார்க்கில் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டுள்ள ரகுமானிடம் இந்த சர்ச்சை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரகுமான், எனது வேலையை சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன். நேர்மையாக இருக்கவும் முயற்சிக்கிறேன். மக்கள் அவர்களின் ஆதரவை எந்த வகையில் தந்தாலும் அதனை நான் ஏற்கிறேன். இத்தனை ஆண்டுகளில் அவர்களின் ஆதரவு இல்லாமல் நான் இல்லை. அவர்களின் ஆதரவு இல்லையென்றால் நான் ஒன்றுமே இல்லை. அனைவரின் அன்புக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன் என்றார்.