ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி |
நேற்று, இன்று, நாளை என்ற தலைப்பில் ஜூலை 8 ம் தேதி இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி லண்டனில் நடந்தது. இதில் தில் சே முதல் ஜெய் ஹோ தான் இசையமைத்த ஏராளமான பாடல்களை ரகுமான் பாடினார்.
நிகழ்ச்சியில் சில தமிழ்ப்பாடல்களையும் ரகுமான் பாடினார். இதை விரும்பாத சில ரசிகர்கள், நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினர். சிலர் தாங்கள் அளித்த நன்கொடையை திருப்பித்தர சொல்லியும் கேட்டனர். இச்சம்பவம் பெரும் சர்ச்சையாக்கப்பட்டது. டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும், தமிழ் பாடல்களை பாடி ரகுமான் ரசிகர்களை அவமதித்து விட்டார். ரகுமான் தன்னை தமிழன் என்றே நிலைநிறுத்திக் கொள்கிறார் என்றும் குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில் நியூயார்க்கில் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டுள்ள ரகுமானிடம் இந்த சர்ச்சை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரகுமான், எனது வேலையை சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன். நேர்மையாக இருக்கவும் முயற்சிக்கிறேன். மக்கள் அவர்களின் ஆதரவை எந்த வகையில் தந்தாலும் அதனை நான் ஏற்கிறேன். இத்தனை ஆண்டுகளில் அவர்களின் ஆதரவு இல்லாமல் நான் இல்லை. அவர்களின் ஆதரவு இல்லையென்றால் நான் ஒன்றுமே இல்லை. அனைவரின் அன்புக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன் என்றார்.