விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
நேற்று, இன்று, நாளை என்ற தலைப்பில் ஜூலை 8 ம் தேதி இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி லண்டனில் நடந்தது. இதில் தில் சே முதல் ஜெய் ஹோ தான் இசையமைத்த ஏராளமான பாடல்களை ரகுமான் பாடினார்.
நிகழ்ச்சியில் சில தமிழ்ப்பாடல்களையும் ரகுமான் பாடினார். இதை விரும்பாத சில ரசிகர்கள், நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினர். சிலர் தாங்கள் அளித்த நன்கொடையை திருப்பித்தர சொல்லியும் கேட்டனர். இச்சம்பவம் பெரும் சர்ச்சையாக்கப்பட்டது. டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும், தமிழ் பாடல்களை பாடி ரகுமான் ரசிகர்களை அவமதித்து விட்டார். ரகுமான் தன்னை தமிழன் என்றே நிலைநிறுத்திக் கொள்கிறார் என்றும் குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில் நியூயார்க்கில் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டுள்ள ரகுமானிடம் இந்த சர்ச்சை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரகுமான், எனது வேலையை சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன். நேர்மையாக இருக்கவும் முயற்சிக்கிறேன். மக்கள் அவர்களின் ஆதரவை எந்த வகையில் தந்தாலும் அதனை நான் ஏற்கிறேன். இத்தனை ஆண்டுகளில் அவர்களின் ஆதரவு இல்லாமல் நான் இல்லை. அவர்களின் ஆதரவு இல்லையென்றால் நான் ஒன்றுமே இல்லை. அனைவரின் அன்புக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன் என்றார்.