ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் தப்பாட்டம். துரை சுதாகர், டோனா என்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். முஜிபுர் ரகுமான் இயக்கி உள்ளார். இது தப்பாட்ட கலைஞர்களின் வாழ்க்கையை பின்னணியாக கொண்டது. இந்தப் படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்தப் படத்தின் வசூலை விவசாய போராட்டத்தில் உயிரிழந்த, மற்றும் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்போவதாக அறிவித்திருந்தனர்.
தற்போது படம் வெளிவருதற்கு முன்பே விவசாய போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டத்தில் உயிரிழந்த 4 விவசாயிகள் குடும்பத்திற்கு தலா 25 ஆயிரம் ரூபாயை படக்குழுவினர் வழங்கினர்.
"தமிழ்நாட்டில் வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. இதனால் விவசாயிகள் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகி தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கான நிவாரணம் வேண்டி, மந்திரிகளிடமும், முதலமைச்சரிடம் நேரடியாக மனு கொடுத்தும் யாரும் கண்டுகொள்ளாத நிலையில், தற்போது தப்பாட்டம் படக்குழுவினர் பண உதவி செய்திருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் படத்தின் மொத்த வசூலையும் விவசாயிகள் நலனுக்கு தரவிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.” என்றார் அய்யாகண்ணு.