அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி | சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் |
மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் தப்பாட்டம். துரை சுதாகர், டோனா என்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். முஜிபுர் ரகுமான் இயக்கி உள்ளார். இது தப்பாட்ட கலைஞர்களின் வாழ்க்கையை பின்னணியாக கொண்டது. இந்தப் படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்தப் படத்தின் வசூலை விவசாய போராட்டத்தில் உயிரிழந்த, மற்றும் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்போவதாக அறிவித்திருந்தனர்.
தற்போது படம் வெளிவருதற்கு முன்பே விவசாய போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டத்தில் உயிரிழந்த 4 விவசாயிகள் குடும்பத்திற்கு தலா 25 ஆயிரம் ரூபாயை படக்குழுவினர் வழங்கினர்.
"தமிழ்நாட்டில் வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. இதனால் விவசாயிகள் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகி தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கான நிவாரணம் வேண்டி, மந்திரிகளிடமும், முதலமைச்சரிடம் நேரடியாக மனு கொடுத்தும் யாரும் கண்டுகொள்ளாத நிலையில், தற்போது தப்பாட்டம் படக்குழுவினர் பண உதவி செய்திருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் படத்தின் மொத்த வசூலையும் விவசாயிகள் நலனுக்கு தரவிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.” என்றார் அய்யாகண்ணு.