அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் தப்பாட்டம். துரை சுதாகர், டோனா என்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். முஜிபுர் ரகுமான் இயக்கி உள்ளார். இது தப்பாட்ட கலைஞர்களின் வாழ்க்கையை பின்னணியாக கொண்டது. இந்தப் படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்தப் படத்தின் வசூலை விவசாய போராட்டத்தில் உயிரிழந்த, மற்றும் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்போவதாக அறிவித்திருந்தனர்.
தற்போது படம் வெளிவருதற்கு முன்பே விவசாய போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டத்தில் உயிரிழந்த 4 விவசாயிகள் குடும்பத்திற்கு தலா 25 ஆயிரம் ரூபாயை படக்குழுவினர் வழங்கினர்.
"தமிழ்நாட்டில் வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. இதனால் விவசாயிகள் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகி தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கான நிவாரணம் வேண்டி, மந்திரிகளிடமும், முதலமைச்சரிடம் நேரடியாக மனு கொடுத்தும் யாரும் கண்டுகொள்ளாத நிலையில், தற்போது தப்பாட்டம் படக்குழுவினர் பண உதவி செய்திருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் படத்தின் மொத்த வசூலையும் விவசாயிகள் நலனுக்கு தரவிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.” என்றார் அய்யாகண்ணு.