கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
தெலுங்கு சினிமாவில் முன்னணியில் இருந்த சமந்தா, தமிழுக்கு வந்தபோது அங்கு வேகமாக வளர்ந்து முன்னணி இடத்தை பிடித்தவர் ராகுல்பிரித்சிங். அதற்கு முன்பே தமிழில் சில படங்களில் நடித்தார். ஆனால் எந்த படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. ஆனால் இப்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வளர்ந்த பிறகு மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்கிறார் ராகுல்பிரித்சிங்.
அந்தவகையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபுவின் ஸ்பைடர் படத்தில் நடித்து வந்தபோது, விஷாலை வைத்து மிஷ்கின் இயக்கும் துப்பறிவாளன் படத்திலும் அவர் நடிப்பதாக இருந்தது. ஆனால் கால்சீட் பிரச்சினையால் ராகுல்பிரித்சிங் அப்படத்தில் நடிக்கவில்லை.
அதையடுத்து சதுரங்க வேட்டை வினோத் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கும் தீரன் அதிகாரம் ஒன்று என்ற தமிழ்ப்படத்தில் கமிட்டாகி விட்டார். புலனாய்வு கதையில் உருவாகும் இந்த படத்தில் டிஎஸ்பியாக கார்த்தி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வரும் ராகுல்பிரித்சிங்கும் போலீசாக நடிப்பதாக இப்போது செய்தி வெளியாகியுள்ளன. ஆக, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று படங்களுக்குப்பிறகு தெலுங்கைப்போலவே தமிழிலும் முன்னணி நடிகை பட்டியலில் சேர்ந்து விடலாம் என்று எதிர்பார்க்கிறார் ராகுல்பிரித்சிங்.