ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
தெலுங்கு சினிமாவில் முன்னணியில் இருந்த சமந்தா, தமிழுக்கு வந்தபோது அங்கு வேகமாக வளர்ந்து முன்னணி இடத்தை பிடித்தவர் ராகுல்பிரித்சிங். அதற்கு முன்பே தமிழில் சில படங்களில் நடித்தார். ஆனால் எந்த படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. ஆனால் இப்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வளர்ந்த பிறகு மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்கிறார் ராகுல்பிரித்சிங்.
அந்தவகையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபுவின் ஸ்பைடர் படத்தில் நடித்து வந்தபோது, விஷாலை வைத்து மிஷ்கின் இயக்கும் துப்பறிவாளன் படத்திலும் அவர் நடிப்பதாக இருந்தது. ஆனால் கால்சீட் பிரச்சினையால் ராகுல்பிரித்சிங் அப்படத்தில் நடிக்கவில்லை.
அதையடுத்து சதுரங்க வேட்டை வினோத் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கும் தீரன் அதிகாரம் ஒன்று என்ற தமிழ்ப்படத்தில் கமிட்டாகி விட்டார். புலனாய்வு கதையில் உருவாகும் இந்த படத்தில் டிஎஸ்பியாக கார்த்தி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வரும் ராகுல்பிரித்சிங்கும் போலீசாக நடிப்பதாக இப்போது செய்தி வெளியாகியுள்ளன. ஆக, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று படங்களுக்குப்பிறகு தெலுங்கைப்போலவே தமிழிலும் முன்னணி நடிகை பட்டியலில் சேர்ந்து விடலாம் என்று எதிர்பார்க்கிறார் ராகுல்பிரித்சிங்.