இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தெலுங்கு சினிமாவில் முன்னணியில் இருந்த சமந்தா, தமிழுக்கு வந்தபோது அங்கு வேகமாக வளர்ந்து முன்னணி இடத்தை பிடித்தவர் ராகுல்பிரித்சிங். அதற்கு முன்பே தமிழில் சில படங்களில் நடித்தார். ஆனால் எந்த படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. ஆனால் இப்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வளர்ந்த பிறகு மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்கிறார் ராகுல்பிரித்சிங்.
அந்தவகையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபுவின் ஸ்பைடர் படத்தில் நடித்து வந்தபோது, விஷாலை வைத்து மிஷ்கின் இயக்கும் துப்பறிவாளன் படத்திலும் அவர் நடிப்பதாக இருந்தது. ஆனால் கால்சீட் பிரச்சினையால் ராகுல்பிரித்சிங் அப்படத்தில் நடிக்கவில்லை.
அதையடுத்து சதுரங்க வேட்டை வினோத் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கும் தீரன் அதிகாரம் ஒன்று என்ற தமிழ்ப்படத்தில் கமிட்டாகி விட்டார். புலனாய்வு கதையில் உருவாகும் இந்த படத்தில் டிஎஸ்பியாக கார்த்தி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வரும் ராகுல்பிரித்சிங்கும் போலீசாக நடிப்பதாக இப்போது செய்தி வெளியாகியுள்ளன. ஆக, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று படங்களுக்குப்பிறகு தெலுங்கைப்போலவே தமிழிலும் முன்னணி நடிகை பட்டியலில் சேர்ந்து விடலாம் என்று எதிர்பார்க்கிறார் ராகுல்பிரித்சிங்.