பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வனமகன் படத்தில் நாயகியாக நடித்தவர் சாயிஷா. இந்தி நடிகையான இவர், தெலுங்கில்தான் நாயகியாக அறிமுகமானார். மேலும் தொடர்ந்து தெலுங்கு படங்களில் கமிட்டாகி வரும் அவர், அடுத்தபடியாக தமிழில், பிரபுதேவா இயக்கும் கறுப்பு ராஜா வெள்ளை ராஜாவில் நடிக்கிறார். இந்தநிலையில், சமீபத்தில் இவர் ஐதராபாத்தில் ஒரு வீடு பிடித்து குடியேறியிருக்கிறார். அந்த வீட்டில் தான் முன்பு சமந்தா மார்க்கெட்டில் பிசியாக இருந்தபோது குடியிருந்தாராம்.
இந்த நிலையில், தற்போது நிக்கி கல்ராணியும், சென்னை எழும்பூரில் ஒரு வீடு பிடித்து குடியேறியிருக்கிறார். ஆனால அந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்கனவே பல வருடங்களாக நயன்தாரா குடியிருந்து வருகிறார். அந்த வகையில், நயன்தாராவை சிலமுறை எதேச்சையாக சந்தித்துள்ளாராம் நிக்கிகல்ராணி. இதையடுத்து அவர்கள் இருவருக்குமிடையே நல்ல நட்பு வளர்ந்து கொண்டி ருக்கிறதாம். இதை தனது கோலிவுட் வட்டாரங்களில் பெருமையாக சொல்லி வருகிறார் நிக்கி கல்ராணி.