ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழக அரசியலில் அசாதிய சூழல் ஏற்பட்டுள்ளது. பீகாரை விட தமிழகத்தில் ஊழல் மிஞ்சிவிட்டது, அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்துள்ளது என கமல் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதற்கு தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி அளித்த பேட்டியில் கமலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்விபரம் வருமாறு... "அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டதாக கூறுவதை நடிகர் கமல்ஹாசன் நிறுத்தி கொள்ள வேண்டும். ஊழல் இருந்தால் அதனை நிரூபிக்க வேண்டும். கமல் தன்னுடைய படங்களுக்கு முறையாக வரி செலுத்தியுள்ளாரா என்பதை ஆய்வு செய்யட்டுமா? சினிமா துறையினருக்காக அரசு பல நடவடிக்கை எடுத்து வருகிறது. தொடர்ந்து கமல் இதுபோன்று பேசி வந்தால் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்".
இவ்வாறு அவர் கூறினார்.