'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழக அரசியலில் அசாதிய சூழல் ஏற்பட்டுள்ளது. பீகாரை விட தமிழகத்தில் ஊழல் மிஞ்சிவிட்டது, அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்துள்ளது என கமல் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதற்கு தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி அளித்த பேட்டியில் கமலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்விபரம் வருமாறு... "அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டதாக கூறுவதை நடிகர் கமல்ஹாசன் நிறுத்தி கொள்ள வேண்டும். ஊழல் இருந்தால் அதனை நிரூபிக்க வேண்டும். கமல் தன்னுடைய படங்களுக்கு முறையாக வரி செலுத்தியுள்ளாரா என்பதை ஆய்வு செய்யட்டுமா? சினிமா துறையினருக்காக அரசு பல நடவடிக்கை எடுத்து வருகிறது. தொடர்ந்து கமல் இதுபோன்று பேசி வந்தால் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்".
இவ்வாறு அவர் கூறினார்.