டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் |
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழக அரசியலில் அசாதிய சூழல் ஏற்பட்டுள்ளது. பீகாரை விட தமிழகத்தில் ஊழல் மிஞ்சிவிட்டது, அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்துள்ளது என கமல் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதற்கு தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி அளித்த பேட்டியில் கமலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்விபரம் வருமாறு... "அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டதாக கூறுவதை நடிகர் கமல்ஹாசன் நிறுத்தி கொள்ள வேண்டும். ஊழல் இருந்தால் அதனை நிரூபிக்க வேண்டும். கமல் தன்னுடைய படங்களுக்கு முறையாக வரி செலுத்தியுள்ளாரா என்பதை ஆய்வு செய்யட்டுமா? சினிமா துறையினருக்காக அரசு பல நடவடிக்கை எடுத்து வருகிறது. தொடர்ந்து கமல் இதுபோன்று பேசி வந்தால் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்".
இவ்வாறு அவர் கூறினார்.