தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் சித்தரவதைக்கு ஆளான வழக்கில் கைது செய்யப்பட்ட மலையாள நடிகர் திலீப் மூன்று தினங்களுக்கு முன் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு, போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கப்பட்டார். திலீப்பின் ஒருநாள் போலீஸ் காவல் இன்று முடிவடைவதையடுத்து, இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் அவர் அங்கமாலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டார்.
தொடர்ந்து ஜாமின் கேட்டு திலீப் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ஜாமின் தர நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் அவரை தொடர்ந்து ஜூலை 25-ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோர்ட்டின் இந்த உத்தரவால் திலீப்பிறகு மேலும் சிக்கல் உருவாகியிருப்பதோடு, இப்போதைக்கு வெளியே வர வாய்ப்பில்லை என்ற தெரிகிறது.