ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் சித்தரவதைக்கு ஆளான வழக்கில் கைது செய்யப்பட்ட மலையாள நடிகர் திலீப் மூன்று தினங்களுக்கு முன் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு, போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கப்பட்டார். திலீப்பின் ஒருநாள் போலீஸ் காவல் இன்று முடிவடைவதையடுத்து, இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் அவர் அங்கமாலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டார்.
தொடர்ந்து ஜாமின் கேட்டு திலீப் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ஜாமின் தர நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் அவரை தொடர்ந்து ஜூலை 25-ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோர்ட்டின் இந்த உத்தரவால் திலீப்பிறகு மேலும் சிக்கல் உருவாகியிருப்பதோடு, இப்போதைக்கு வெளியே வர வாய்ப்பில்லை என்ற தெரிகிறது.