தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள சினிமாவின் மோஸ்ட் வான்டட் ஒளிப்பதிவாளர் ஜோமோன் டி ஜான், தமிழில் 'பிரம்மன்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த இவர், கௌதம் வாசுதேவ் மேனன்-விக்ரம் கூட்டணியில் உருவாகி வரும் 'துருவ நட்சத்திரம்' படத்தின் இரண்டு நிமிட டிரைலர் காட்சிகளை மட்டும் படமாக்கியவர். அதன்பின் அந்தப்படத்திலிருந்து விலகி, பாலிவுட்டில் ரோஹித் ஷெட்டி இயக்கும் 'கோல்மால்-4'க்கு ஒளிப்பதிவு செய்ய சென்றுவிட்டார்.. தற்போது அதை முடித்துவிட்ட ஜோமோன், ஒளிப்பதிவாளர்கள் இயக்குனராகும் வரிசையில் தற்போது 'கைரளி' என்கிற படம் மூலம் இயக்குனராகவும் அவதராம் எடுத்துள்ளார்..
இந்தப்படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார் நிவின்பாலி. ஏற்கனவே நிவின்பாலியின் சூப்பர்ஹிட் படங்களான 'தட்டத்தின் மறயத்து', 'ஒரு வடக்கன் செல்பி' மற்றும் 'ஜேக்கப்பிண்டே சுவர்க்க ராஜ்யம்' ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி அவருடன் நல்ல நட்புறவில் இருக்கிறார் ஜோமோன். அதுமட்டுமல்ல, இந்தப்படத்தின் கதையை நிவின் பாலியின் இன்னொரு நண்பரும் நிவின்பாலி நடித்த 'சகாவு' படத்தின் இயக்குனரும், தேசியவிருது பெற்றவருமான சித்தார்த் சிவா தான் எழுதுகிறார்.
இந்தப்படத்தின் கதை 1979ல் மர்மமான முறையில் 49 பேருடன் மாயமான கேரளாவின் முதல் கப்பலான 'எம்.வி.கைரளி பற்றியது. இப்படப்பிடிப்பு கேரளா, கோவா, டில்லி மட்டுமின்றி குவைத், ஜெர்மனி மற்றும் ஜிபோட்டியிலும் நடக்கவுள்ளது. டிசம்பர் மாதம் ஷூட்டிங் தொடங்கவுள்ளது.