வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
மலையாள நடிகை கடத்தப்பட்டு பாலியல் சித்தரவதைக்கு ஆளான வழக்கில் கைது செய்யப்பட்ட மலையாள நடிகர் திலீப் மூன்று தினங்களுக்கு முன் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு, தற்போது போலீஸ் கஸ்டடியில் விசாரணையில் இருக்கிறார். இன்று மாலை வரை விசாரணைக்கான நேரத்தை அனுமதித்துள்ளது நீதிமன்றம். இந்த விசாரணையில் திலீப்பிடமிருந்து ஆதாரப்பூர்வாமான சில தகவல்களை பெற போலீஸ் தரப்பு முயற்சித்து வருகிறது.
ஆனால் திலீப்பிடம் இருந்து அவர்கள் எதிர்பார்த்த பதில்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றே சொல்லப்படுகிறது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன் நடந்த விசாரணையில் சொன்ன விபரங்களையே கிளிப்பிள்ளை போல திரும்ப திரும்ப சொல்லி வருகிறாராம் திலீப். இந்த சம்பவத்தில் தனக்கு தொடர்பில்லை என்றும், பல்சர் சுனில் யாரென்றே தெரியாது என்றும் சாதித்து வருகிறாராம்.
ஆனால் போலீஸார் தற்போது தங்கள் வசம் உள்ள ஆதாரங்களான போன் கால்கள், மற்றும் மெமரி கார்டு பற்றிய விபரங்களை குறிப்பிட்டு கேள்வி கேட்கும்போது அதற்கான பதில் திலீப்பிடம் இல்லையாம். இதனால் திலீப் மூலமாகவே உண்மையை ஒப்ப்புக்கொள்ள வைக்க கிடுக்கிப்பிடி விசாரணையை மேற்கொண்டு வருகின்றனராம் போலீஸார்.