பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாள நடிகை கடத்தப்பட்டு பாலியல் சித்தரவதைக்கு ஆளான வழக்கில் கைது செய்யப்பட்ட மலையாள நடிகர் திலீப் மூன்று தினங்களுக்கு முன் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு, தற்போது போலீஸ் கஸ்டடியில் விசாரணையில் இருக்கிறார். இன்று மாலை வரை விசாரணைக்கான நேரத்தை அனுமதித்துள்ளது நீதிமன்றம். இந்த விசாரணையில் திலீப்பிடமிருந்து ஆதாரப்பூர்வாமான சில தகவல்களை பெற போலீஸ் தரப்பு முயற்சித்து வருகிறது.
ஆனால் திலீப்பிடம் இருந்து அவர்கள் எதிர்பார்த்த பதில்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றே சொல்லப்படுகிறது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன் நடந்த விசாரணையில் சொன்ன விபரங்களையே கிளிப்பிள்ளை போல திரும்ப திரும்ப சொல்லி வருகிறாராம் திலீப். இந்த சம்பவத்தில் தனக்கு தொடர்பில்லை என்றும், பல்சர் சுனில் யாரென்றே தெரியாது என்றும் சாதித்து வருகிறாராம்.
ஆனால் போலீஸார் தற்போது தங்கள் வசம் உள்ள ஆதாரங்களான போன் கால்கள், மற்றும் மெமரி கார்டு பற்றிய விபரங்களை குறிப்பிட்டு கேள்வி கேட்கும்போது அதற்கான பதில் திலீப்பிடம் இல்லையாம். இதனால் திலீப் மூலமாகவே உண்மையை ஒப்ப்புக்கொள்ள வைக்க கிடுக்கிப்பிடி விசாரணையை மேற்கொண்டு வருகின்றனராம் போலீஸார்.