இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழில் டாப்சிக்கு படங்கள் குறைந்த விட்டபோதும், இந்தியில் பிசியாக நடித்து வருகிறார். தெலுங்கில் ஆனந்தோ பிரம்மா என்ற ஹாரர் படத்தில் லீடு ரோலில் நடித்திருக்கிறார். அந்த படம் ஆகஸ்ட் 18-ந்தேதி ரிலீஸ் ஆகிறது.
இந்தநிலையில், சமீபத்தில் ஐதராபாத்தில் டாப்சி அளித்த பேட்டி ஒன்றில், தன்னை சினிமாவில் அறிமுகம் செய்த தெலுங்கு சினிமாவின் மூத்த இயக்குநர் கே.ராகவேந்திரராவ், ஜூமண்டி நாடம் என்ற தெலுங்கு படத்தில் நடித்தபோது, தனது தொப்புளில் ஹீரோவை தேங்காய் உருட்ட வைத்து படமாக்கியதாக கூறியிருந்தார். அதோடு, கிளாமராக நடிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தால் நானே நடித்திருப்பேன். ஆனால் எதற்காக அவர் அப்படி செய்தார் என்பது இப்போதுவரை எனக்கு புரியவில்லை என்று கிண்டலாக கூறியிருந்தார்.
ஒரு முன்னணி டைரக்டரை அவர் அப்படி சொன்னதால், தெலுங்கு சினிமா சினிமாத்துறையினர் டாப்சி மீது அதிருப்தியடைந்துள்ளனர். அதோடு, அவரை அப்படி கிண்டல் செய்ததற்காக மன்னிப்பு கேட்குமாறு சிலர் கூறி வருகிறார்களாம். ஆனால் ஆனந்தோ பிரம்மா படத்தில் நடித்து விட்டு மும்பை சென்றுவிட்ட டாப்சி இதுவரை தான் டைரக்டர் கே.ராகவேந்திரராவ் குறித்து தான் சொன்ன கருத்துக்கு எந்தவித வருத்தமும் தெரிவிக்கவில்லையாம். அதனால் இந்த பிரசினை டோலிவுட்டில் பெரிய அளவில் வெடிக்கும் சூழல் உருவாகியிருக்கிறதாம். அனேகமாக அவருக்கு ரெட் கார்டு போட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.