ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் கமலுக்கு பிரச்னை என்றால் திரையுலகமே அவர் பின்னால் நிற்கும் என நடிகர் விஷால் கூறினார்.
தமிழ் படங்களுக்கான மாநில அரசு விருதுகள் நேற்றுமுன்தினம் அறிவிக்கப்பட்டன. 8 ஆண்டுகளுக்கு பிறகு விருதுகள் ஒரே கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் திரையுலகினர் நன்றி தெரிவித்து வருகின்றனர். தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்க பொதுச் செயலருமான விஷால், இயக்குநர் சங்க தலைவர் விக்ரமன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் சுரேஷ் உட்பட பலர் நேற்று தமிழக முதல்வர் பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், "இவ்விருது திரைத்துறையினருக்கு மிகுந்த ஊக்கமாக இருக்கும். நடிகர் கமல் ஒரு விஷயத்தில் இறங்கினால் அதுப்பற்றி முழுமையாக தெரிந்த பிறகே இறங்குவார். அதனால் பிக்பாஸ் சர்ச்சை எல்லாம் ஒரு பெரிய விஷயமே கிடையாது. அவருக்கு ஒரு பிரச்னை என்றால் திரையுலகமே அவர் பின்னால் நிற்கும்" என்றார்.