பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
2009ம் ஆண்டு வெளிவந்த மலையன் படத்தில் நடித்திருந்தார் கரண். இந்தப் படத்திற்காக அந்த ஆண்டின் சிறந்த நடிகராக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதற்கு நன்றி தெரிவித்து கரண் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
ஒரு நடிகருக்கு விருது என்பது பல படிகள் ஏறிச் சென்று உயர்ந்த உணர்வைத் தரும். அந்த வகையில் மலையன் படத்தில் நடித்ததற்காக எனக்கு விருது கிடைத்து இருக்கிறது. அந்தப் படத்தில் நடிக்கும் போது சிரமப்பட்டுப் பல சவால்களை சந்தித்து நடித்தேன். அந்த வலி, நினைவுகள் எல்லாம் விருது என்கிற மருந்து மூலம் காணாமல் போய் விட்டது. இப்போது புத்துணர்வும், புது பலமும் பெற்றுள்ளதாக உணர்கிறேன். அந்தப் படத்துக்காக என்னை சிறந்த நடிகராக தேர்வு செய்துள்ள தமிழக அரசுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விருதுக்கு என்னைப் பரிந்துரை செய்தவர்களுக்கும், விருது தேர்வுக்குழுவினருக்கும் என் நன்றி. இவ்விருதுக்கு காரணமாக இருந்த தயாரிப்பு நிறுவனத்திற்கும், இயக்குநருக்கும் மனமார்ந்த நன்றிகள். இவ்விருதை படத்தில் பணிபுரிந்த அத்தனை தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.
இவ்வாறு நடிகர் கரண் கூறியுள்ளார்.