துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
2012ம் ஆண்டு வெளியான நீதானே என் பொன் வசந்தம் படத்தில் நடித்த ஜீவாவுக்கு அந்த ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து ஜீவா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
ஒரு நடிகருக்கு படத்தில் நடித்ததற்கு வணிக ரீதியான வெற்றி முக்கியம். அது போல் விருதுகளும் முக்கியம். கிடைக்கிற விருது அங்கீகாரம் கலைஞர்களை உற்சாக மனநிலைக்கு இட்டுச் செல்லும். அது மட்டுமல்ல, மேலும் உழைக்க ஊக்கம் தரும். அவ்வகையில் நீதானே என் பொன் வசந்தம் படம் விமர்சன ரீதியில் பெரிதும் பாராட்டப்பட்ட படம். இப்படி பேசப்படும் வகையில் அந்தப் படத்தை கெளதம் மேனன் உருவாக்கியிருந்தார்.
அந்தப் படத்துக்காக என்னைச் சிறந்த நடிகராகத் தேர்வு செய்துள்ள தமிழக அரசுக்கு என் நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உற்சாகமும் பெருமையும் அளிக்கும் வகையிலான இந்த விருதுக்கு என்னைத் தேர்வு செய்து பரிந்துரை செய்த விருதுக் குழுவினருக்கும் என் நன்றி. இந்த நேரத்தில் என்னுடன் அந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் மகிழ்ச்சியையும் நன்றியையும் கூறிக் கொள்கிறேன். அது மட்டுமல்ல 2009 முதல் 2014 வரையிலான படங்களுக்கு விருதுகளுக்குத் தேர்வாகியுள்ள நடிகர், நடிகைகள் மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞரகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு நடிகர் ஜீவா கூறியுள்ளார்.