ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடிக்கும் காலா படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கப்பட்டது. முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு அமெரிக்கா சென்றார் ரஜினி. தற்போது சென்னை திரும்பியுள்ள ரஜினி காலா படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
காலா படத்துக்காக சென்னை புறநகரில் உள்ள ஈவிபி பூங்காவில், மும்பை தாராவி போன்ற செட் போடப்பட்டுள்ளது. இங்கு சுமார் 60 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இங்கு எடுக்கப்படும் காட்சிகளோடு ரஜினி சம்பந்தப்பட்ட மொத்த காட்சிகளும் முடிந்துவிடுமாம்.
சென்னையில் 60 நாட்கள் படப்பிடிப்பை முடித்துவிட்டு, ரஜினி தவிர்த்து ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி, அருள்தாஸ் ஆகிய மற்ற கலைஞர்கள் அடங்கிய குழுவினரோடு மும்பை செல்ல இருக்கிறார் பா.ரஞ்சித். அங்கே சில நாட்கள் இறுதிகட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருக்கிறார் பா.ரஞ்சித். ஹியூமா குரேஷி, நானா படேகர், அஞ்சலி பட்டீல் ஆகியோரும் மும்பை ஷெட்யூலில் கலந்து கொள்கின்றனர்.