Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

“திலீப்பின் பழிவாங்கும் ஸ்டைலே தனி” ; 'மொய்தீன்' இயக்குனரின் அனுபவம்..!

14 ஜூலை, 2017 - 17:53 IST
எழுத்தின் அளவு:
Director-RS-Vimal-shares-how-dileep-help-to-kanchanamala-and-how-he-create-as-hero-image

பாவனா விவாகரத்தில் திலீப் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற பின்னர், பெரும்பாலும் அவரது பழிவாங்கும் போக்கு பற்றித்தான் பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அவர் ஒருவரை பழிவாங்க நினைத்தால் அதை எந்தவகையிலாவது செய்து முடிப்பார் என்றே பாவனா விவகாரத்தை பற்றி குறிப்பிடுகின்றனர்.. தனக்கும் திலீப்பிடம் இதேபோல வேறு மாதிரியான அனுபவம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார் இயக்குனர் ஆர்.எஸ்.விமல்.. கடந்த 2015ல் பிருத்விராஜ்-பார்வதி நடித்த சூப்பர்ஹிட் படமான 'என்னு நிண்டே மொய்தீன்' படத்தை இயக்கியவர் தான் இந்த விமல்.

அந்தப்படத்தில் மொய்தீன்-காஞ்சனமாலா ஜோடியாக முதலில் இவர் நடிக்க வைக்க நினைத்தது திலீப்-காவ்யா மாதவன் இருவரையும் தான். ஆனால் திலீப் கதையை கேட்டாலும் கூட, தான் புதியவர்களின் இயக்கத்தில் கொஞ்ச காலத்துக்கு நடிப்பதில்லை என முடிவெடுத்துள்ளதாக கூறி அந்தப்படத்தில் நடிப்பதை தவிர்த்துவிட்டாராம். காவ்யா மாதவனிடம் பேசி ஓரளவு சம்மதிக்க வைத்திருந்ததை கூட, தன்னையே இயக்குனர் வேண்டாம் என சொல்லிவிட்டதாக காவ்யாவிடம் திரித்து சொல்லி அவரையும் நடிக்கவிடாமல் செய்துவிட்டாராம் திலீப். அதன்பின்னரே பிருத்விராஜும், பார்வதியும் இந்தப்படத்திற்குள் வந்தனர் என்கிறார் விமல்..

ஆனால் படம் வெளியாகி ஹிட்டானதும் அதை பொறுத்துக்கொள்ள முடியாத திலீப், இயக்குனர் விமல் மற்றும் படக்குழுவினரை வித்தியாசமான முறையில் பழி தீர்த்துக்கொண்டாராம். அதாவது அந்தப்படத்தில் பார்வதி ஏற்று நடித்த கதாநாயகி கேரக்டரான காஞ்சனமாலா, தற்போதும் நிகழ்காலத்தில் வாழ்ந்துவரும் ஒரு உண்மை கதாபாத்திரம் தான்.. அவரது கதையை படமாக்க அவரை சம்மதிக்க வைத்த இயக்குனர் விமல் படம் முடிந்து ரிலீசாவதற்குள், சில காரணங்களால் காஞ்சனமாலாவின் மன வருத்தத்திற்கு ஆளாகிவிட்டார்.

படம் நன்றாக ஓடியபோதும் கூட விமல் மற்றும் பிருத்விராஜ் தரப்பில் இருந்து காஞ்சனமாலாவிற்கு எந்த உதவியும் கிடைக்காத நிலையில்தான், ஆட்டத்தில் உள்ளே நுழைந்தார் திலீப்.. தனது காதலர் மொய்தீன் பெயரால் நினைவு நூலகம் ஒன்றை அமைக்க வேண்டும் என்கிற காஞ்சனமாலாவின் நீண்ட நாள் கனவை தான் நிறைவேற்றி தருவதாக கூறி புதிய நூலக கட்டடம் அமைக்க இடம் ஒதுக்கி அடிக்கல்லும் நாட்டினார் திலீப்.. அந்த அடிக்கல்லில் திலீப்பின் பெயரும் இடம்பெற்றது. ஆனால் 'மொய்தீன்' படக்குழுவினர் எவரது பெயரும் அதில் இடம்பெறவில்லை.

ஆனால் திலீப் நல்லவர் போல, காஞ்சனமாலாவுக்கு மொய்தீன் குழுவினர் மீது எந்த வருத்தம் இல்லை என்றும் அவர்கள் காஞ்சனமாலாவை தயக்கமில்லாமல் சந்திப்பதுடன் இந்த நல்ல காரியத்திலும் பங்கேற்கலாம் என அழைப்பும் கூட விடுத்தார்.. இதுவும் கூட அவரது ஒருவகையான காஸ்ட்லியான பழிவாங்கும் செயல் தான் என குறிப்பிட்டுள்ளார் இயக்குனர் ஆர்.எஸ்.விமல்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in