‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
பாவனா விவகாரத்தில் நடிகர் திலீப்பிறகு ஆதரவு தெரிவிக்கப்போய் தானே வலிய சிக்கலை இழுத்துக்கொண்டுள்ளார் மலையாள சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான அஜூ வர்கீஸ்.. தமிழ் சினிமாவில் சூரி, சந்தானம் எப்படியோ, அப்படித்தான் கேரளாவில் இவரும்.. பிசியான காமெடி நடிகரான இவர் திலீப்புடன் 'ரிங் மாஸ்டர்', '2 கண்ட்ரீஸ்' மற்றும் 'வெல்கம் ட்டூ சென்ட்ரல் ஜெயில்' ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளார்.
கடந்த ஜூன்-26ஆம் தேதி, திலீப்பிற்கு ஆதரவாக பேஸ்புக்கில் ஒரு பதிவை இட்டவர் அதில் தேவையில்லாமல் நடிகை பாவனாவின் பெயரை குறிப்பிட்டிருந்தார்.. அது அப்போதே சோஷியல் மீடியாவில் கடுமையான விமர்சனத்துக்கு ஆளானது.. உடனே மன்னிப்பு கேட்டு அதை நீக்கியும் விட்டார் அஜூ வர்கீஸ். ஆனால் ஜூலை-3ஆம் தேதி இது தொடர்பாக கிரீஷ்பாபு என்பவர் போலீஸில் புகார் அளித்தார்.
பாவனா விவகாரத்தில் தற்போது திலீப் கைதாகியுள்ள நிலையில், நேற்று அஜூ வர்கீஸ் கலமசேரி போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைக்கப்பட்டு கிட்டத்தட்ட மூன்றுமணி நேரம் விசாரிக்கப்பட்டார். மேலும் அஜூ வர்கீஸிடம் இருந்து அவரது செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு, அந்த போனில் இருந்துதான் பாவனா குறித்த அவரது பேஸ்புக் பதிவு வெளியானதா என நுண்ணறிவு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது உண்மைதான் என அங்கிருந்து ரிசல்ட் வரும் பட்சத்தில் அஜூ வர்கீஸும் அரெஸ்ட் ஆகலாம் என்றே போலீஸ் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.