இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக வழங்கப்படாமல் இருந்த திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...
"அரசு தற்போது அறிவித்திருக்கும் 2007-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையில் உள்ள தமிழ் திரைப்படங்களுக்கான மானியத்தொகை வழங்குதல், மற்றும் 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையில் உள்ள தமிழ் திரைப்படங்களுக்கு தமிழக அரசால் வழங்கும் மாநில அரசு விருதுகள் அறிவிப்பானது தமிழ் திரையுலகினரிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பினை வெளியிட்ட முதல்வர் பழனிச்சாமிக்கும், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜூக்கும், அரசு துறை செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் எங்களது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாகவும், அனைத்து திரையுலகினர் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.