'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு முன், பின் என திரைப்பட வியாபாரங்களைப் பிரித்துப் பார்க்க வேண்டியுள்ளது. நட்சத்திரங்கள் உடனே அவர்களது சம்பளத்தைக் குறைப்பது தான் உடனடித் தேவை. தமிழ்நாடு அரசின் கேளிக்கை வரி விதிப்பை எதிர்த்து தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர் வேலை நிறுத்தம் செய்தனர்.
அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தைக்குப் பின் கடந்த வெள்ளிக் கிழமை முதல் மீண்டும் தியேட்டர்கள் செயல்பட ஆரம்பித்தன. ஆனால், ஜிஎஸ்டி வரி விதிப்பால் டிக்கெட் கட்டணங்கள் உயர்ந்ததை அடுத்து மக்கள் தியேட்டர்களுக்கு வருவது குறைந்துவிட்டது. சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் ஒரு சில தியேட்டர்களில், ஒரு சில காட்சிகள் மட்டுமே அரங்கு நிறைந்திருக்கிறது. மற்ற காட்சிகளில் 50க்கும் குறைவான மக்கள் வந்த பல தியேட்டர்கள் இருந்தன என்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் ஜிஎஸ்டி வரி விதிப்பிற்குப் பின்னர் தங்களது திரைப்பட வியாபாரத்தை ஆரம்பித்துள்ள பல தயாரிப்பாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்களாம். அவர்கள் எதிர்பார்க்கும் தொகையைத் தர வினியோகஸ்தர்கள் தயாராக இல்லை எனக் கூறப்படுகிறது. தயாரிப்பாளர்கள் சொல்லும் தொகையிலிருந்து 25 சதவீதத்திற்கும் அதிகமாக வினியோகஸ்தர்கள் குறைத்துக் கேட்பதாகச் சொல்கிறார்கள்.
அடுத்து வர உள்ள பெரிய நடிகர்களின் படங்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படலாம் என்கிறார்கள். ஜிஎஸ்டி வரியை மனதில் கொள்ளாமல் தாராளமாகச் செலவு செய்து எடுக்கப்பட்ட அவர்களின் படங்கள் எதிர்பார்க்கும் வியாபாரத்தை நடத்த வாய்ப்பில்லை.
அதனால், அந்தப் படத்தில் நடித்துள்ள ஹீரோக்கள் சம்பளத்தைக் குறைத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. அதற்கு ஹீரோக்கள் சம்மதிப்பார்களா என்பதே கேள்வி ?.
விவேகம், ஸ்பைடர், மெர்சல், தானா சேர்ந்த கூட்டம், காலா உள்ளிட்ட பல படங்கள் இந்த சிக்கலில் சிக்க வாய்ப்புள்ளது.