தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
2009ம் ஆண்டிலிருந்து 2014ம் ஆண்டு வரையிலான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த நடிகர் சிறப்புப் பரிசு, சிறந்த நடிகை சிறப்புப் பரிசு ஆகியவை மிகவும் முக்கியமான விருதுகள்.
தமிழ்நாடு அரசு திரைப்படத் துறையினருக்கு இப்படி ஒரு விருது வழங்கி வருகிறது என்பது பலருக்கும் மறந்து போயிருக்கும். நேற்று திடீரென இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டதும், ஆறு வருடங்களுக்கும் சேர்த்து யார், யாரெல்லாம் விருதுகளை வாங்கியிருக்கிறார்கள் என அந்த நீண்ட பட்டியலை பலரும் அலசி ஆராய்ந்து பார்க்க நீண்ட நேரமாகியிருக்கும்.
பொதுவாக, அரசு சார்புடைய நடிகர், நடிகைகளுக்குத்தான் இந்த மாதிரியான மாநில அரசு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். 'படையப்பா' படத்திற்கு ரஜினிகாந்திற்கு சிறந்த நடிகருக்கான மாநில விருது வழங்கிய காலமும் ஒன்று இருந்தது.
ஆனால், நேற்றைய விருதுகள் எந்த ஒரு முன்னணி நடிகருக்கும் ஒரு சார்புடன் வழங்கப்படாமல் சரியான நபர்களுக்குத்தான் வழங்கப்பட்டிருக்கிறது என்று திரையுலகத்தினரே சொல்லுமளவிற்கு உள்ளது.
குறிப்பாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ் போன்றவர்கள் இந்த விருதுகள் பட்டியலில் இல்லாதது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்னும் 2015, 2016ம் வருடங்களுக்கான இரண்டு வருட விருதுகளையும் சேர்த்து அறிவித்திருக்கலாம் என்று மட்டும் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.