பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தெலுங்குத் திரையுலகத்தில் கடந்த சில நாட்களாகவே 'போதைப் பொருளுக்கு' அடிமையாகியுள்ள சிலரைப் பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இயக்குனர், நடிகர், நடிகைகள் என சிலர் போதை வஸ்துகளைப் பயன்படுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு சிறப்பு விசாரணைப் பிரிவு மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இது தொடர்பாக தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த், சுரேஷ் பாபு ஆகியோரும் பேசியுள்ளனர்.
அதில் சில முக்கிய ஹீரோ, ஹீரோயின், இயக்குனர் இருப்பதாகவும் தெரிகிறது. அவர்கள் யார் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் வெளிப்படுத்தவில்லை என்றாலும், சிலர் அவர்கள் யார் என்பதை தெரியப்படுத்தியிருக்கிறார்கள். போதைப் பொருள் பழக்கக் குற்றத்தில் சிக்கியுள்ள தெலுங்குத் திரையுலகினர் விரைவில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தற்போது தெலுங்குத் திரையுலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.