டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாணா காத்தாடி சமந்தா, தெலுங்கிற்கு சென்று முன்னணி நடிகையானவர், நாகார்ஜூனாவின் மகன் நாகசைதன்யாவுடன் ஒரு படத்தில் நடித்தபோது அவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. அதையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் இப்போது திருமணம் வரை வந்து விட்டார்கள். இந்த நேரத்தில் தமிழ், தெலுங்கில் கைவசம் பல படங்களை வைத்திருக்கும் சமந்தா அந்த படங்களை திருமணத்திற்கு முன்பே நடித்துக்கொடுப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.
ஒருவேளை திருமணத்திற்கு பிறகு அவர் நடிக்க மாட்டார் என்கிற சந்தேகத்தில் மீடியாவினர் திருமணத்திற்கு பிறகு நடிப்பீர்களா? மாட்டீர்களா? என்று அவரை கேட்ட வண்ணம் உள்ளனர். ஆனால் சமீபத்தில் இதுகுறித்து மீடியாவினர் கேட்டபோது கோபமடைந்து விட்டாராம் சமந்தா. இதே கேள்வியை திருமணம் செய்து கொள்ளப்போகும் ஒரு டாக்டரிடம் போய் கேட்பீர்களா? என்றும் சரவெடியாய் வெடித்து சிதறி விட்டாராம் சமந்தா.