ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தனுஷின் 3 படத்திற்காக அனிருத் இசையில் உருவான ஒய்திஸ் கொலவெறி என்ற பாடலின் பிரமாண்ட வெற்றி காரணமாக குறுகிய காலத்தில் அவர் பிரபல இசையமைப்பாளர் பட்டியலில் சேர்ந்து விட்டார். ஆரம்பத்தில் தனுஷ், சிவகார்த்திகேயன் படங்களுக்கு இசையமைத்து வந்தவர், தற்போது விஜய், அஜீத், சூர்யா என முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். தற்போது அவரது இசையில் அஜீத்தின் விவேகம், சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் ஆகிய படப்பாடல்கள் ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், தெலுங்கிலும் திரிவிக்ரம் இயக்கத்தில், பவன் கல்யாண் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் இசையமைப்பாளராக கமிட்டாகியிருக்கிறார் அனிருத். இதற்கு முன்பு நிதின்-சமந்தாவை வைத்து திரிவிக்ரம் இயக்கிய அ ஆ படத்திற்கே இசையமைக்க வேண்டியவர் அனிருத். அப்போது அவர் தமிழில் பிசியாக இருந்ததால் அந்த படத்திற்கு வேறு இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்தார் திரிவிக்ரம். ஆனால் இப்போது முன்கூட்டியே அனிருத்தை ஒப்பந்தம் செய்து விட்டார் திரிவிக்ரம்.
ஆக, தற்போது தமிழில் அடுத்தடுத்து மூன்று மெகா படங்களுக்கு பின்னணி இசையமைக்கும் வேலையில் இறங்கியுள்ள அனிருத், இந்த படவேலைகளை முடித்ததும் பவன் கல்யாண் படத்திற்கு இசையமைக்கும் வேலைகளை தொடங்குகிறாராம். அந்த வகையில், இனிமேல் வருடத்திற்கு ஒரு தெலுங்கு படத்திற்காவது இசையமைத்து விட வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறாராம் அனிருத்.