தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழுக்காக இசையை வளைத்தவர் மனயங்கத் சுப்பிரமணியன் விஸ்வநாதன் என்ற எம்.எஸ்.விஸ்வநாதன், கேரளாவின் பாலக்காட்டுக்கு அருகில் உள்ள எலப்புள்ளி என்ற கிராமத்தில் 1928-ம் அண்டு பிறந்தார்.
பள்ளிப் படிப்பில் நாட்டமில்லாமல், நீலகண்ட பாகவதரிடம் கர்நாடக இசை பயின்றார். 13வது வயதிலேயே, மேடைக் கச்சேரி நிகழ்த்தினார். இசையமைப்பாளர், சி.ஆர்.சுப்புராமன் இசைக்குழுவில், விஸ்வநாதன் ஆர்மோனியமும், அவர், வயலினும் வாசித்தனர். பின், இருவரும் இணைந்து, 1953ல், ஜெனோவா படத்திற்கு இசையமைத்தனர். தமிழில், 800; மலையாளம், 80; தெலுங்கு, 30; கன்னடம், 15 ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
ராமமூர்த்தியுடன் இணைந்து, 750 படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ்த்தாய் வாழ்த்தான, நீராரும் கடலுடுத்த பாடலுக்கு, மோகன ராகத்தில் இசையமைத்தார். கடந்த 2015 ஜூலை 14ம் தேதி இறந்தார்.
காலத்தால் அழியாத, கேட்க கேட்க திகட்டாத எண்ணற்ற பாடல்களை கொடுத்து, இசையுலகில் நீங்கா இடம் பிடித்த எம்.எஸ்.வி., இறந்து இன்றோடு இரண்டாண்டு ஆகிவிட்ட நிலையில் அவரை நினைவுகூர்வோமாக...!