ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அறிமுக இயக்குனர் சந்தோஷ் கோபால் இயக்கும் படம் ஜல்லிக்கட்டு. அகிம்சா நிறுவனம் தயாரிக்கிறது. எஸ்.கே.பூபதி ஒளிப்பதிவு செய்கிறார், ரமேஷ் விநாயகம் இசை அமைக்கிறார். சென்னை, மெரினா கடற்கரையில் இளைஞர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்தை மையாக கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களும், மாணவிகளும் நடிக்கிறார்கள். அந்த போராட்டக் காட்சிகள் அப்படியே படத்தில் பயன்படுத்தப்படுகிறது.
இந்தப் படத்தில் ஆப்பிரிக்க நாட்டில் உள்ள கால்நடை கலாச்சாரம் மற்றும் அங்கு நடக்கும் ஜல்லிகட்டு போட்டிகளும் இடம்பெறுகிறது. இதற்காக படக்குழுவினர் 15 நாள் வரை அங்கு தங்கியிருந்து படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். இதுகுறித்து இயக்குனர் சந்தோஷ் கோபால் கூறியதாவது:
ஆப்பரிக்க நாடான கென்யாவில் ஆபத்தான விலங்குகளுடன் வாழும் பழங்குடியின மக்களின் மசாய் மரா கிராமத்தில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். இங்கு எந்த தகவல் தொடர்பும் இல்லாமல் இயற்கையோடு மக்கள் இணைந்து அற்புதமாக வாழ்கிறார்கள். தங்கள் கலாச்சாரம், பழமையை இப்போதும் காப்பாற்றி வருகிறார்கள். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்கிற தத்துப்படி வாழ்கிறாகள். தமிழ் மக்களின் பல கலாச்சார அடையாளங்கள் அவர்களிடம் காணப்படுகிறது. இதை கேள்விப்பட்டு அங்கு சென்று 15 நாட்கள், அந்த மக்களோடு தங்கியிருந்து படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம்.
பறக்கும் பலூன் மூலம் பல அடர்ந்த காட்டுப் பகுதிகளுக்குள் சென்று படம்பிடித்துள்ளோம். நம்ம ஊர் காங்கேயம் காளைக்கும், அவர்களின் காளைக்கும் மரபணுக்கள் ஒன்றாக இருப்பது இன்னும் ஆச்சர்யம். இங்கு நடத்தப்பட்ட முதல் தமிழ் படப்பிடிப்பும் இதுதான். இந்தப் படம் நிச்சயம் ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தையும் புதிய அனுபவத்தையும் ஏற்படுத்தும், என்றார்.