தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டிவி நிகழ்ச்சியில், ஒரு தரப்பு மக்களை இழிவு படுத்தும் விதமாக விமர்சித்த நடிகை காயத்ரி ரகுராம் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போலீசில் புகார் தரப்பட்டு உள்ளது.
பிக் பாஸ்
தனியார் டிவி ஒன்றில், பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சிக்காக, நடிகர், நடிகையர், 15 பேர் ஒரே வீட்டில் தங்க வைக்கப்பட்டு, அவர்கள் சக மனிதர்களுடன் பழகும் விதம், விமர்சன கணைகளை எப்படி எதிர்கொள்கின்றனர் மற்றும் சகிப்புத்தன்மை குறித்து, கேமராவில் பதிவு செய்து, தினமும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
புகார்
இதில் பங்கேற்றுள்ள, நடிகையர் ஆபாசமாக உடை அணிந்துள்ளனர். சமூக சீர்கேட்டுக்கு வழி வகுக்கும் இந்நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும். நடிகர், நடிகையர் மற்றும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும், கமல்ஹாசனையும் கைது செய்ய வேண்டும் என, நேற்று முன் தினம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் புகார் அளித்தனர்.
சேரி பிகேவியர்
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகை காயத்ரி ரகுராம், மற்றொரு நடிகையான ஓவியாவின் நடவடிக்கைகளை பார்த்து, சேரி பிகேவியர் போல், இருப்பதாக கூறியுள்ளார். ஒரு தரப்பு மக்களை இழிவுபடுத்தும் வகையில், அவர் பேசியது கண்டிக்கத்தக்கது; சட்டப்படி குற்றம். அதனால், காயத்ரி ரகுராம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கமிஷனர் அலுவலகத்தில், தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பினர், நேற்று புகார் அளித்துள்ளனர்.
மன்னிப்பு கேட்கணும்
புகாரில், அவர்கள் கூறியிருப்பதாவது: பல கோடி மக்கள் பார்க்கும், தனியார், டிவி நிகழ்ச்சியில், ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மீது வெறுப்பை உமிழும் வகையில், நடிகை காயத்ரி ரகுராம் பேசியுள்ளார். சேரி மக்கள் மீது தவறான கண்ணோட்டம் ஏற்படும் வகையிலும், சமூக ஏற்ற தாழ்வுகளை அதிகரிக்கும் வகையிலும், காயத்ரி ரகுராமின் பேச்சு உள்ளது. அவரின் பேச்சை ஒளிபரப்பிய, தனியார், டிவி நிர்வாகிகள் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதுடன், வேறு எந்த, டிவியும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடாதவாறு பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.