'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகை பாவனா கடத்தப்பட்டது, பாலியல் சித்தரவதைக்கு ஆளாக்கப்பட்டது, இவற்றின் பின்னணியில் சூத்தரதாரியாக இருந்து செயல்பட்டது என்கிற காரணங்களுக்காகத்தான் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பலரும் திலீப் தனது பழிவாங்கும் குணத்திற்காக இந்த தண்டனைக்கு ஆளாகியிருக்கிறார் என கூறிக்கொண்டிருக்க, “எங்களையும் எங்கள் கடவுளையும் திலீப் அவமதித்தது தான், திலீப்பின் இந்தநிலைக்கு காரணம்” என புதிய தகவலை வெளியிட்டு, காலரை தூக்கிவிட்டு கொண்டுள்ளார்கள் கேரளாவை சேர்ந்த டிங்கோயிஸ்ட்டுகள் என்பவர்கள்..
'புரபெஷர் டிங்கன்' என்கிற படத்தில் மேஜிக்மேனாக நடிக்க இருந்தார் நடிகர் திலீப். இந்த டிங்கன் என்பது நம்ம ஊர் காமிக்ஸில் இடம் பெரும் இரும்புக்கை மாயாவி, மந்திரவாதி மாண்ட்ரேக் வகையை சேர்ந்த ஒரு கற்பனையான புனைவு பாத்திரம். ஆனால் கேரளாவில் உள்ள சில மலையாளிகள், தாங்கள் டிங்கன் என்பவரை கடவுளாக மதித்து தீவிரமாக பின்தொடர்பவர்கள் என்றும் தங்களை டிங்கோயிஸ்ட் என்றும் கூறிக் கொண்டும் இருக்கிறார்கள். அதனால் தங்களது கடவுளான 'டிங்கன்' பெயரில் காமெடியாக படம் எடுத்து அவரது பெயரை சிதைத்துவிட கூடாது என கோஷம் போட்டு, கடந்த வருடம் ஜனவரி மாதம் இவர்கள் திலீப்புக்கு சொந்தமான தி 'புட்டு' என்கிற கடைமுன் வந்து ஆர்ப்பாட்டமெல்லாம் நடத்தி சென்றனர்.
இப்போது திலீப்பின் இந்தநிலையை பார்த்து, “நாங்கள் அன்றே அவரை எச்சரித்தோம்.. ஆனால் அவரோ அதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. ஆனால் இன்று 'கர்மா' அவரை இந்த நிலைக்கு கொண்டுவந்துவிட்டது” என கூறியுள்ளனர். அத்துடன் சூட்டோடு சூடாக, “எங்கள் கடவுள் எவ்வளவு பவர்புல் பார்த்தீர்களா..? அதனால் டிங்கோயிஸ்ட்டுகளாக மாறுங்கள்” என தங்களது கடையையும் சந்தடிசாக்கில் விரித்து வைத்துள்ளனர் இந்த டிங்கோயிஸ்ட்டுகள்.