வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமை கவிஞரவாக வலம் வருபவர் வைரமுத்து. தேனி மாவட்டம், மெட்டூரில் பிறந்த வைரமுத்து இதுவரை 7,500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். வெற்றிகரமான பாடலாசிரியராக, தமிழ் மீது அதிக பற்றி கொண்டவராக பாடல்கள், நாவல்கள், கவிதைத் தொகுப்புகள் என நிறைய எழுதியுள்ளார். இவருக்கு இன்று(ஜூலை 13-ம் தேதி) 62வது பிறந்தநாள்.
பொதுவாக வைரமுத்துவின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் கவிஞர்கள் திருவிழாக கொண்டாடப்படும். ஆனால் இந்தாண்டு அப்படியில்லை. திமுக., தலைவர் கருணாநிதியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு எளிமையாக கொண்டாடுகின்றனர். இந்நிலையில் வைரமுத்துவிற்கு இயக்குநர் சீனு ராமசாமி கவிதை நடையில் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அதன் விபரம் வருமாறு...
இன்று
நாட்டுக்கோழிகளும்
வெள்ளாட்டு கிடாய்களும்
அலறின..
ஜல்லிக்கட்டுகாளைகள்
திமிழ்களை நிமிர்த்தி
தழுவ அழைத்தன
கத்தரிப்பூ பூ பூத்திருந்தது நின் வருகையை
கெங்குவார் பட்டியில்...
இன்று கொண்டாட....
காமுக்காப்பட்டியின் தங்கை
வைகை வெள்ளம்
வந்து சேராத பள்ளம்
ஆண்டிப்பட்டி கணவா காத்தில் விஜய் சேதுபதி மீன் பிடித்து விளையாடிய நதியூராம்
மெட்டூரில் பிறந்தது வைரமுத்து என்ற கருப்பு காப்பியம்
தென்கிழக்கு சீமையின்
தமிழ் கோப்பியம்
ஏழு தேசிய விருதில்
இரண்டை எனக்குத்தந்த
வகுடெடுத்த வடுகப்பட்டி
கண்ணன்
கலைஞர் இவருக்கு
அண்ணன்
தமிழ் சினிமா பாட்டு உலகில் அதிக பட்ச சம்பளம் பெரும் பாடலாசியர்
மதன் கார்க்கி வரை
களத்தில் நிற்கும்
நல்லாசிரியர்
அன்பு பிறந்த நாள்
வாழ்த்துக்கள் கவிஞரே
இயக்குநர் சீனு ராமசாமி
இவ்வாறு சீனு ராமசாமி கூறியுள்ளார்.