ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மும்பையை சேர்ந்தவராக இருந்தாலும் நடிகை காஜல் அகர்வால் பாலிவுட்டை விட தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கில் தான் பிரபலமாக திகழ்ந்தார். இருந்தாலும் பாலிவுட்டில் அவ்வப்போது வாய்ப்பு வந்தால் நடிப்பார். கடந்தாண்டு இவரது நடிப்பில் டூ லப்சான் கி கஹானி என்ற படத்தில் கண் பார்வையற்றவராக நடித்திருந்தார் காஜல். இந்தப்படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டாலும் அதன்பின் அவருக்கு பாலிவுட்டில் வாய்ப்பு வரவில்லை.
இந்நிலையில் இப்போது மீண்டும் காஜலுக்கு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. தர்மேந்திரா தயாரிப்பில் யமலா பகலா தீவான படத்தின் மூன்றாம் பாகம் உருவாக உள்ளது. இதில் காஜல் அகர்வாலும் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார். அவர் பாபி தியோலுக்கு ஜோடியாக, மாடர்ன் பெண்ணாக நடிக்கிறார். வழக்கம் போல் சன்னி தியோல், தர்மேந்திராவும் நடிக்கின்றனர். அடுத்த மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது, 2018-ல் படத்தை ரிலீஸ் செய்ய எண்ணியுள்ளனர்.