'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சிவராஜ்குமாரை வைத்து கன்னடத்தில் இயக்கிய சிவலிங்கா படத்தை தமிழில் ராகவா லாரன்சை வைத்து இயக்கினார் பி.வாசு. அதையடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு படத்தை இயக்க தயாராகிக்கொண்டிருக்கிறார் அவர். இதற்கு முன்பு ரஜினி, ஜோதிகாவை வைத்து அவர் இயக்கிய சந்திரமுகி படம் போன்று, இந்த படம் இருக்கும் என்கிறார்கள். அதோடு அப்படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இயக்குகிறாராம் பி.வாசு.
தற்போது அந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்து விட்ட அவர், சில முன்னணி நடிகைகளிடம் கால்சீட் கேட்டு வந்தார். அவர் எதிர்பார்த்த நடிகைகள் உடனடியாக கால்சீட் கொடுக்க முன்வரவில்லை என்றபோதும், காஜல்அகர்வால் கால்சீட் கொடுக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதோடு, நயன்தாரா, திரிஷா போன்ற நடிகைகளைப்போன்று கதையின் நாயகியாக நடிக்கும் ஆசையில் இருக்கும் காஜல்அகர்வால், பி.வாசு, ஹீரோயின் சப்ஜெக்ட் என்று சொன்னதும் டபுள் ஓகே சொல்லிவிட்டாராம். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது.