மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி, ஆபாசமாக உள்ளது, தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கிறது, சமூகத்திற்கு கேடானது. ஆகவே, இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும், கமல் உள்ளிட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களையும் கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி சார்பில், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனியார் டிவி ஒன்றுக்கு பேட்டியளித்த கமல் கூறியிருப்பதாவது... "பிக்பாஸில் என்ன ஆபாசம் உள்ளது. இந்த குற்றச்சாட்டு முட்டாள்தனமானது. கிரிக்கெட் போட்டியின் போது கூட பேட்ஸ்மேன்கள் சிக்ஸ், போர் என்று அடிக்கும்போது சிறிய உடை அணிந்து சியர் கேர்ள்ஸ் ஆடுகிறார்கள். அப்படியானால் அவர்களையும் கைது செய்வீர்களா. தமிழ் ஆர்வலர்களிடத்தில் நான் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளேன். நான் ஒரு கம்யூனிஸ்ட்வாதி என இந்துத்துவா அமைப்புகள் நினைக்கின்றனர். ஆனால், நான் ஒரு பகுத்தறிவாதி. சைவ சித்தாந்தத்தில், வேதங்கள் யோனிக்கு சமமானது என கூறப்பட்டுள்ளது. இதற்கு என்ன சொல்வீர்கள். எந்த ஒரு புதிய முயற்சியையும் வரவேற்பவன் நான்.
இவ்வாறு கமல் கூறியுள்ளார்.