ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அண்மைக்காலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் ஆர்.பார்த்திபன், மலையாள இயக்குநர் எம்.ஏ.நிஷாத் இயக்கவிருக்கும் 'கேணி' திரைப்படத்தில் முக்கிய வேடமொன்றில் நடிக்க உள்ளார்.
பார்த்திபன் உடன் நடிகை ஜெயப்பிரதா, நாசர், 'தலைவாசல்' விஜய் ஆகியோரும் முக்கியவேடங்களில் நடிக்கவிருக்கிறார்கள். கேரள மாநிலம் உருவான 1956 ஆம் ஆண்டில் சம்பவங்கள் நடப்பதுபோல் 'கேணி' படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது.
தமிழகத்தையும், கேரளாவையும் தனித்தனி மாநிலமாக பிரிக்கும்போது, ஒரு கிணறு, ரெண்டு எல்லைக்கும் பொதுவான பகுதியில் அமைந்துவிடுகிறது. அந்த கிணறை சொந்தம் கொண்டாடும் இரண்டு எல்லைப்பகுதிகளின் மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் கேணி படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாம்.
மலையாள இயக்குநராக இருந்தாலும், தமிழ் மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் கேணி படத்தை இயக்கியுள்ளாராம் நிஷாத். அதனால்தான் இந்தப்படத்தில் நடிக்க பார்த்திபன் சம்மதம் தெரிவித்தாராம்.
கேணியைப் பற்றிய கதைபோல் தோன்றினாலும், உண்மையில் முல்லைப்பெரியாறு அணையைப் பற்றிய படம் இது என்று கூறப்படுகிறது.