மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
அண்மைக்காலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் ஆர்.பார்த்திபன், மலையாள இயக்குநர் எம்.ஏ.நிஷாத் இயக்கவிருக்கும் 'கேணி' திரைப்படத்தில் முக்கிய வேடமொன்றில் நடிக்க உள்ளார்.
பார்த்திபன் உடன் நடிகை ஜெயப்பிரதா, நாசர், 'தலைவாசல்' விஜய் ஆகியோரும் முக்கியவேடங்களில் நடிக்கவிருக்கிறார்கள். கேரள மாநிலம் உருவான 1956 ஆம் ஆண்டில் சம்பவங்கள் நடப்பதுபோல் 'கேணி' படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது.
தமிழகத்தையும், கேரளாவையும் தனித்தனி மாநிலமாக பிரிக்கும்போது, ஒரு கிணறு, ரெண்டு எல்லைக்கும் பொதுவான பகுதியில் அமைந்துவிடுகிறது. அந்த கிணறை சொந்தம் கொண்டாடும் இரண்டு எல்லைப்பகுதிகளின் மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் கேணி படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாம்.
மலையாள இயக்குநராக இருந்தாலும், தமிழ் மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் கேணி படத்தை இயக்கியுள்ளாராம் நிஷாத். அதனால்தான் இந்தப்படத்தில் நடிக்க பார்த்திபன் சம்மதம் தெரிவித்தாராம்.
கேணியைப் பற்றிய கதைபோல் தோன்றினாலும், உண்மையில் முல்லைப்பெரியாறு அணையைப் பற்றிய படம் இது என்று கூறப்படுகிறது.