ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை பாவனா விவகாரத்தில் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து திலீப் அவர் பொறுப்பு வகித்த நடிகர்சங்கம் உள்ளிட்ட பல சங்கங்களில் இருந்து அதிரடியாகவும் நீக்கப்பட்டுள்ளார். திலீப் குறித்து அவருடன் நடித்த, இணைந்து பணியாற்றிய முக்கிய பிரபலங்கள் யாரும் வாய் திறக்காத நிலையில், “திலீப்புடன் இணைந்து நடித்தது குறித்து வெட்கப்படுகிறேன்” என வெளிப்படையாக கருத்து கூறியுள்ளார் இயக்குனரும் நடிகருமான ஜாய் மேத்யூ.
மனதில் பட்டதை ஒளிவு மறைவின்றி பேசுபவர் என பெயரெடுத்த ஜாய் மேத்யூ, சிங்காரவேலன், அவதராம், கிங் லையர் என மூன்று படங்களில் திலீப்புடன் இணைந்து நடித்துள்ளார். “நம்மிடையே இப்படி ஒருவர் உலாவந்திருக்கிறார், அவருடன் நாமும் பணியாற்றி இருக்கிறோம் என்பதை நினைக்கும்போதே அவமானமாக உணர்கிறேன், வெட்கப்படுகிறேன். இனி வழக்கு எந்தவிதமாக நகரும் என்று இப்போதே உறுதியாக சொல்லமுடியாது. வக்கீலின் வாதமும் பணமும் உண்மையை மறைக்க முயற்சிக்கலாம். நீதி நிலைநாட்டப்பட வேண்டும், அதுவே என் போன்றோர் விருப்பம்” என வெளிப்படையாக கூறியுள்ளார் ஜாய் மேத்யூ.