இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிரபல ஹிந்தி நடிகரான விவேக் ஓபராய், தற்போது அஜித்தின் விவேகம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவர், 2004-ம் ஆண்டு சுனாமியால் தமிழகத்தின் பல கடலோர மாவட்டங்கள் தண்ணீர் தத்தளித்தபோது, கடலூரில் சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தை தத்தெடுத்தார். அந்த கிராமத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து அந்த மக்களின் மனதில் இடம் பிடித்தார்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் சத்தீஸ்கரில் உள்ள சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் வீரமரணமடைந்த 25 மத்திய ரிசர்வ் போலீஸ் குடும்பங்களுக்கு வீடு அளிப்பதாக விவேக் ஓபராய் அறிவித்திருந்தார். அதன்படி தனது கட்டுமான நிறுவனத்தின் சார்பில் மும்பையில் கட்டியுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 25 ராணுவ குடும்பத்தாருக்கு வீடு வழங்கியுள்ளார் விவேக் ஓபராய்.
விவேக் ஓபராயின் இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.