ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
கன்னட நடிகர் சுதீப்பை வைத்து முடிஞ்சா இவனை புடி படத்தை இயக்கிய கே.எஸ்.ரவிக்குமார், தனது அடுத்த படத்தை தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவை வைத்து இயக்குகிறார். அந்த படத்திற்கு ரெட்டிகாரு, ஜெயசிம்ஹா என்று தலைப்பு வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் அதை கே.எஸ்.ரவிக்குமார் மறுக்கிறார்.
பாலகிருஷ்ணாவை வைத்து நான் இயக்கும் படத்திற்கு இன்னும் டைட்டீல் வைக்கவில்லை. அந்த படத்திற்கு எந்தமாதிரியான டைட்டீலை வைப்பது என்பதை பாலகிருஷ்ணா முடிவு செய்வார். கண்டிப்பாக படத்தின் டைட்டில் பவர்புல்லாக இருக்கும். அதில் ஒரு சிம்ம கர்ஜனை இருக்கும்.
பாலகிருஷ்ணாவை என்.டி.ஆரின் ஜெராக்ஸ் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு எல்லா விசயங்களிலும் அப்பா என்.டி.ஆரைப் போலவே இருக்கிறார். முக்கியமாக, ரொம்ப எனர்ஜியானவர். அவரை ஒரு பத்து நிமிசம் சந்தித்து விட்டு வெளியே வந்தால் பூஸ்ட் குடித்த எனர்ஜி தெரியும்.
சின்ன விசயமாக இருந்தாலும் அதைகூட ஒரு எனர்ஜியுடன் தான் பேசுவார். அதனால் அவரிடம் சாந்தமாக செல்பவர்கள்கூட அவரிடம் பேசி விட்டு வெளியே வரும்போது பரபரப்பாக வருவார்கள். அவரது கண்ணுல முகத்துல ஒரு பவர் இருக்கு. அது கண்டிப்பாக நான் அவரை வைத்து இயக்குற படத்தில் இன்னும் பெருசாக வெளிப்படும் என்கிறார் கே.எஸ்.ரவிக் குமார்.