அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பரவலாக நடித்து வருகிறார் காஜல் அகர்வால். அந்த வகையில் சினிமாவில் என்ட்ரியாகி பத்து வருடங்களாகியும் எந்தவித தொய்வும் இல்லாமல் இப்போதுவரை பிசியாக நடித்து வருகிறார் காஜல். தற்போது தமிழில் விவேகம், மெர்சல் ஆகிய படங்களில் நடித்திருப்பவர் தெலுங்கில் நேனே ராஜூ நேனே மந்திரி உள்பட பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்தநிலையில், இதுவரை திருமணம் குறித்து யாராவது கேள்வி கேட்டால் அதற்கு சிரிப்பை மட்டும் பதிலாக கொடுத்து வந்த காஜல் அகர்வால் தற்போது அதுகுறித்து மனம் திறந்துள்ளார். அவர் கூறுகையில், "சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டிருப்பதால் திருமணம் குறித்து நான் யோசிக்கவில்லை. அதேசமயம், கண்டிப்பாக காதல் திருமணம் செய்ய வேண்டும் என்பதுதான் எனது ஆசை. அதனால் எனக்கு பிடித்தமான நபரை நான் சந்திக்கும்போது காதலித்து திருமணம் செய்வேன்.
அப்படி நான் காதலிக்கும் நபர் சினிமா உலகை சாராதவராக இருந்தாலும் ஓகேதான். நல்லவராக இருந்தால் எந்த துறையை சார்ந்தவதாக இருந்தாலும் திருமணம் செய்து கொள்வேன். அவர் பெரிய அழகனாக இருக்கிறாரோ இல்லையோ, கண்டிப்பாக 6 அடிக்கு மேல் உயரம் இருக்க வேண்டும். இதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்கிறார் காஜல்அகர்வால்.