டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சிரஞ்சீவி தெலுங்கில் மறுபிரவேசம் செய்த படம் கைதி எண் 150. இப்படம் தமிழில் விஜய் நடித்த கத்தி படத்தின் ரிமேக் ஆகும். 2017 ஜனவரியில் இந்த படம் திரைக்கு வந்து சூப்பர் ஹிட்டானது. அதையடுத்து பல டைரக்டர்களிடம் தீவிரமாக கதை கேட்டு வந்த சிரஞ்சீவி, சுரேந்தர் என்ற இயக்குனர் சொன்ன கதை பிடித்துப் போக அதில் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார்.
மேலும், பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் ராயல் சீமாவை ஆண்ட அரசரான உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் கதையில் இந்த படம் தயாராகிறது. ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய இந்தியர்களில் இவரும் ஒருவராம். அதனால் உய்யலவாடா நரசிம்ம ரெட்டி என்ற அவர் பெயரிலேயே இந்த படம் தயாராகிறது. இந்த படத்தை சிரஞ்சீவியின் பிறந்த நாளான ஆகஸ்ட் 22-ந்தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சுதந்திர போராட்ட வீரரின் கதை என்பதால், வருகிற ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்றே அப்படத்தை தொடங்க இப்போது முடிவு செய்துள்ளனர்.
சிரஞ்சீவியின் மகனும், நடிகருமான ராம்சரண்தேஜா தனது கோனிடெலா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிக்கும் இந்த படத்தில் சிரஞ்சீவியுடன் ஐஸ்வர்யா ராய், நயன்தாரா ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.