'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
தெலுங்கு நடிகர் பவன் கல்யாணை பொறுத்தவரை சக நடிகர்களிடம் பாரபட்சம் பார்க்காமல் மதிப்பாக பழகுபவர்தான். ஆனால் ஒரு சிலர் அதைவைத்து அவரிடம் உரிமை மீறி பேசும்போது பவன் கல்யாண் ருத்ரமூர்த்தி ஆகி விடுவாராம். அப்படித்தான் கப்பார் சிங் படத்தில் அவருடன் நடித்த சக்கலக்கா சங்கர் என்கிற காமெடி நடிகர், படத்தின் இயக்குனரை பற்றி கிண்டலாக பவன் கல்யாணிடமே சொன்னாராம். பதிலுக்கு பரிசாக காமெடி நடிகருக்கு கிடைத்ததோ கன்னத்தில் அறை. இந்த செய்தி வெளியே பரவிய பின் அந்த நடிகர் பவன் கல்யாண் என்னை அறையவில்லை.. அவர் என் கடவுள் மாதிரி என பல்டி அடித்தது தனிக்கதை..
தற்போது திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத தனது 25வது படத்தில் நடித்து வருகிறார் பவன் கல்யாண்.. இந்தப்படத்தில் பவன் கல்யாணுடன் இணைந்து முக்கியமான வேடத்தில் காமெடி நடிகர் ஒருவரும் நடித்து வருகிறார். அவர், பவன் கல்யாணின் ஜனசேவா அரசியல் கட்சி பற்றி பவனிடமே பேச்சுவாக்கில் கிண்டலாக ஏதோ சொன்னாராம். இதனால் டென்சனான பவன் கல்யாண், அந்த நடிகரை இனி இதுபோன்ற பேச்சுக்கள் இங்கே செட்டில் மட்டுமல்ல, வேறு எங்கேயும் நீ பேசக்கூடாது என கடுமையாக எச்சரித்து அனுப்பினாராம். அந்த காமெடி நடிகர் (யார் என்பதை சஸ்பென்சாக வைத்துள்ளார்கள்) ஏற்கனவே த்ரிவிக்ரமின் 'அ ஆ' படத்திலும் நடித்தவர் என்பதால் இந்தப்படத்திலும் வாய்ப்பு கொடுத்துள்ளார்களாம்.