தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
காலா படத்தின் கதையை உரிமை கோரிய வழக்கில் ரஜினிக்கு பதில் அளிக்க சென்னை சிவில் கோர்ட் மீண்டும் ஒரு முறை காலஅவகாசம் வழங்கியுள்ளது.
ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில், தனுஷ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் காலா. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து முடிந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று முதல் சென்னையில் ஆரம்பமாகிறது.
இந்நிலையில், சென்னை, போரூரை சேர்ந்த, கே.ராஜசேகரன் என்பவர், காலா படத்தின் மூலக்கரு மற்றும் கதை என்னுடையது. இதுகுறித்து, ரஜினியை அவரது வீட்டில் சந்தித்து பேசியுள்ளேன். 1996ல், இயக்குனர் ரவிக்குமார் மூலம், கரிகாலன் மற்றும் உடன்பிறவாத தங்கச்சி ஆகிய படத் தலைப்புகளை வெளியிட்டேன். கரிகாலன் கதையின் கரு மற்றும் தலைப்பு அனைத்தும், என் படைப்பு. என் படைப்பை, நடிகர் தனுஷ், இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மற்றொரு வடிவில், படமாக தயாரிக்கின்றனர். எனவே, கரிகாலன் என்ற தலைப்பையும், கதையையும் பயன்படுத்த, தடை விதிக்க வேண்டும் என சென்னை சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இதுதொடர்பாக பதிலளிக்கும்படி, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, ரஞ்சித், ரஜினி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டிருந்ததோடு, உரிய பதில் அளிக்கும்படி கால அவகாசமும் வழங்கியிருந்தது. ஆனால் ரஜினி உள்ளிட்டோர் பதிலளிக்காத சூழ்நிலையில், மும்பையில் படப்பிடிப்பு நடைபெறுவதால் பதிலளிக்க மேலும் கால அவகாசம் வேண்டும் என ரஜினி உள்ளிட்டோர் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ரஜினி உள்ளிட்டோருக்கு மீண்டும் ஒருமுறை கால அவகாசம் அளித்து, வழக்கை வருகிற ஜூலை 20-ம் தேதிக்கு தள்ளி வைத்தது.